சென்னை, செப். 18- சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே செயற்கைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என சமீபத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் தனது உரையின் போது தெரிவித்தார். அந்த வகையில் பெரும் பொருட் செலவில் சென்னையின் புதிய அடை யாளமாகவும், சென்னையின் புதிய துணை நகரமாகவும் மாமல்ல புரத்தை மாற்ற திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக 25 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில் இங்கு மெட்ரோ அமைக்க வாய்ப்புள்ளதா கவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக மகாபலிபுரத்தில் உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா பகுதிகளை மேம்படுத் துவது, புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது என பல முக்கிய மான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக சென்னை கடற் கரையை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தில்லி கொல்கத் தாவில் உருவாக்கப் பட்டது போல், நியூ டவுன்கள், சாட்டிலைட் சிட்டிகள், துணைக்கோள் நகரங்கள் போல மாமல்லபுரத்திலும் புதிய நகரை கொண்டு வர முடிவு செய்யப்பட் டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு, வளவன்தாங்கல், நெம்மேலி, கிருஷ்ணங்கரனை, சலவன்குப்பம், சந்தானம் பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்கலரி, பட்டிப்புலம், சிறுதாவூர், கருங்குழி பள்ளம், பையனூர், காரணை, பஞ்சானந் தூர், அதிகமநல்லூர் அமைஞ் சான்பட்டி நல்லூர், தஞ்சை நல்லூர், கொக்கிலமேடு, மாமல்ல புரம், காடம்பட்டி, பெருமளனேரி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளை பெற்றான்,
பூஞ்சேரி ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட 25 கிராமங் களை சர்வதேச தரத்திற்கு நகரங்களாக மாற்றி அங்கிருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் நிலை யில், மாமல்லபுரம் சென்னையின் புதிய துணை நகரமாகவும், துணை அடையாளமாகவும் மாறும். மேலும் இங்கே முதலீடுகள் குவியும் என்றும், போக்குவரத்து அதிகரிக் கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் முதலீட்டில் இந்த துணைக்கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் இருப்பதால் இங்கு நிறைய கடல் வளம் இருப்பது நாம் அறிந்ததே. மேலும் இது கடற்கரை கோயில்களுக்கு புகழ் பெற்றது. இதனால் இப்பகுதியில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம். இதையடுத்து இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இங்கு மின்சார ரயில் சேவையும் மெட்ரோ ரயில் சேவையும் இணைக்கப்படும். இந்நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் இந்த நியூ டவுன் அமைப்பதற்கான பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.