காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் 66வது ஆண்டு பொது மாநாட்டை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் வி.ரமேஷ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், சென்னை பகுதி-1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.