districts

img

கிருஷ்ணகிரியில் 63 தொழிலாளர்கள் வேலை நீக்கம்: சிஐடியு கண்டனம்

கிருஷ்ணகிரி, ஜன. 11- கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிப்காட்டில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டேரா  இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற தொழிற்சாலை ஆரம்பிக்கப் பட்டது. இங்கு சுமார் 5,000 தொழி லாளர்கள் இங்கு பணியமர்த்தப்பட்ட னர். இந்த தொழிற்சாலையில் கட்டிட சுவர்கள் அமைப்பதற்கான சிமெண்ட் ரெடிமேட் பலகைகள், பாலங்களுக்கான சிமெண்ட் பலகைகள் தூண்கள் இந்த தொழிற் சாலையில் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த  தொழிலாளர்களை பணியில்  அமர்த்தி அதிக லாபம் ஈட்டிய நிர்வாகம்,  கர்நாடகா, ஹைதராபாத் என்று பல இடங்களில் பெரிய நிறுவனங்களை துவங்கியது. இந்நிலையில், தொழிற்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது ஆலை நிர்வாகம். இதுகுறித்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஆலோசனை பெறவில்லை. நிர்வாக இயக்கு நர்கள், அதிகாரிகள் தன்னிச்சை யான முடிவால் கடன் தொகை தற்போது ரூ. 493 கோடியாக உயர்ந் துள்ளது. இதற்கு முழு காரணம்  தொழிற்சாலையின் இயக்குநர் களும் அதிகாரிகளுமே ஆகும். இந்தி பேசும் மாநிலங்களிலி ருந்து அதிகமாக இறக்குமதி செய்து, அறைகளில் தங்க வைத்து  கொத்தடிமைகள் போல் கடுமை யான வேலைகள் வாங்கி வந்தனர்.  குறைந்த ஊதியத்தையும் முறை யாக கொடுப்பதில்லை. கேட்டால்,  காவல்துறையை கொண்டு மிரட்டு வது என்று அடக்குமுறைகளை ஏவியது நிர்வாகம் மறுபக்கத்தில், கொத்துக் கொத்தாக ஒப்பந்த தொழிலாளர்களை வெளியே அனுப்பி வருகின்றனர். சுமார் 500 மட்டுமே தற்போது உள்ளனர் இந்த நிலையில், 3 ஆண்டு களுக்கு முன்பு சிஐடியு சங்கத் தில் இணைந்தனர். ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, நிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளை கேட்டனர்.

 தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. மாறாக, சங்க நிர்வாகி கள் உள்ளிட்ட 20 பேரை சட்டவிரோத மாக வெளி மாநிலங்களுக்கு பணி மாறுதல் செய்தனர். இது குறித்து சங்க தலைவர்கள்  பலமுறை தொழிற் தாவா எழுப்பி னர். கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஆலை நிர்வாகம் அழைக்கவில்லை.  இந்நிலையில், கடந்த மாதம் 43 தொழிலாளர்களை எவ்வித முன்  அறிவிப்பும் கொடுக்காமல் சட்ட விரோதமாக பணியில் நீக்கம் செய்த னர். நிர்வாகத்தின் தொடர் தொழி லாளர் விரோத தொழிற்சாலை நிர்வாகத்தின் சட்ட விரோத போக்கை எதிர்த்து அராஜக போக்கை  கண்டித்து தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய  நீதி வழங்க வலியுறுத்தி தொழிற் சாலை முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்க தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் பீட்டர்,சங்க செயலாளர் பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர்,பொருளாளர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் பிஜி.மூர்த்தி, மாதேஸ் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜி.கே.நஞ்சுன்டன் உரையாற்றி னார்.