districts

img

நெல்லை, நாகர்கோவிலுக்கு 62 சிறப்பு ரயில்கள்

சென்னை,ஏப்.8- கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க திருநெல்வேலி, நாகர்கோவில், எர்ணா குளம் ஆகிய பகுதிகளுக்கு  தாம்பரத்தில்  இருந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கு எண். 06005/06006 ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சிறப்பு கட்டணத்தில் அதிவேக ரயிலாக 10 சர்வீஸ் இயக்கப்படும். ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய  தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். இதே போல நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29,  ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும். திருநெல்வேலி-தாம்பரம் அதிவேக சிறப்பு கட்டண ரயில் எண். 06004 / ஏப்ரல் 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26  ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் எண். 06003 தாம்பரம்-திருநெல்வேலி  சிறப்பு ரயில் ஏப்ரல் 18, 25, மே 2, , 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை போய் சேரும். தாம்பரம்- எர்ணாகுளம் சிறப்பு ரயில் எண். 06019 மதியம் 3 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்றடை யும். இந்த ரயில் ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27,  ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புறப்பட்டு செல்லும். இதே போல எதிர் மார்க்கத்தில் எர்ணா குளத்தில் இந்த ரயில் எண். 06020 இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல்  12.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29,  ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில்  இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்க ளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.