கொடைக்கானலில் மே மாத கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக் கலைத் துறை சார்பில் பிரையன்ட் பூங்கா வில் மலர் செடிகள் நடவு செய்யப் பட்டுள்ளது. சால்வியா, பிங்க்அஸ்டர், டெல்பினியம், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட டேலியா,நெதர்லாந் திலிருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் உட்பட ஒரு லட்சம் மலர்ச் செடிகளை நடவு செய்துள்ளனர்.