சென்னை, ஏப். 28- ஆவடி - கோயம்பேடு இடையே 15 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க 6 நிறுவனங் கள் விண்ணப்பித்துள்ளன. சென்னையில் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று பொது போக்குவரத்து சேவை யில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக் கையும், வரவேற்பும் அதிகரித்து வரு கிறது. மேலும் சென்னை புறநகர் பகுதி களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் தற்போது இரண்டு கட்ட மாக 54 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக் கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டத்தில் 116.1 கி.மீ. தூரத் திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து அம்பத் தூர் வழியாக ஆவடி வரை 16.7 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் நீட்டிப் பதற்கான திட்டமும் தொடங்கப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 6 நிறுவனங்கள் விண்ணப் பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. இந்த முழு திட்டத்திற்கான கட்டு மான செலவு ரூ.6376.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான காலக்கெடு 180 நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட்ஸ், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலை யம், அம்பத்தூர் எஸ்டேட் தொலை பேசி அலுவலகம், டன்லப், அம்பத் தூர் ரயில் நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையம், ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலி டெக்னிக், ஆவடி ஆகிய 15 இடங்க ளில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக் கப்பட உள்ளது. இந்த திட்ட அறிக்கை தயாரிக்கும் போது ஆவடி அடுத்த பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பது குறித்து பரி சீலிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறு வனம் தெரிவித்துள்ளது.