மாதவி காவியம் நூல் வெளியீடு மற்றும் கவிஞர் தமிழ் ஒளியின் 57ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாயன்று (மார்ச் 29) நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த்துறையும் புகழ்புத்தகாலயமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் பேராசிரியர் வீ.அரசு பங்கேற்று உரையாற்றினார். கல்லூரி முதல்வர் இரா.சாந்தி, தமிழ்த்துறைத் தலைவர் அ. தும்மா பிரான்சிஸ், ச.இரா. செம்மலர் ஆகியோர் பேசினர். பேரா.அண்ணாதுரை, சுழற்சி 1-ன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், எழுத்தாளர் மயிலைபாலு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.