சென்னை பல்கலைக்கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சமூகவியல் துறை முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் சமூகவியல் துறை சார்பில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விழா மலரை வெளியிட்டனர். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி, சமூகவியல் துறைத் தலைவர் எம்.தமிழரசன், இந்திய சமூகவியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.இந்திரா, சமூகவியல் துறை முன்னாள் பேராசிரியர் டி.ஜெயலட்சுமி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.