districts

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 பேர் கைது

காஞ்சிபுரம், செப்.7- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திர மேரூர், திருப்பெரும்புதூர், படப்பை உள்ளிட்ட 4 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் தபால் நிலையம் முன்பு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், இ.முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது.  திருப்பெரும்புதூர் தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலை மையில் நடைபெற்றது.  உத்திரமேரூர்  ஐ.ஓ.பி வங்கி கிளை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்க்கு கட்சியின் செயற்குழு  உறுப்பினர் கே.நேரு தலைமையில் நடை பெற்றது. படப்பை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.