districts

சென்னை முக்கிய செய்திகள்

மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு  500 மின்சார தாழ்தள பேருந்துகள் 

கொள்முதலுக்கான ஒப்பந்தம் வெளியீடு

சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள் முதல் செய்ய ஒப்பந்தம் வெளியிடப்பட் டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப் படும் பேருந்துகளில் தினசரி 33.60 லட்சம்  பேர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில்  சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட வற்றால் நாளுக்கு நாள் பொது போக்கு வரத்து தேவையும் அதிகரித்துள்ளது. சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை நிவர்த்தி செய்வ தற்காக கூடுதல் பேருந்துகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிதாக மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டது. முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்த நிதி யாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500  மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப் படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 500  மின்சார தாழ்தள பேருந்துகளை கொள் முதல் செய்ய போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகரிகள் கூறுகையில், சென்னை  புறநகர் பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலை கள், அலுவலகங்கள் அதிகரித்து வருவ தால், பேருந்துகளின் தேவை அதிகமாக  இருக்கிறது. தற்போது 3,436 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது  500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள் முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் 400 சாதாரண பேருந்துகள், 100 குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்க உள்ளோம். பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகள் கிராஸ் காஸ்ட் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், மின்சார பேருந்துகள் இயக்கம்,  பராமரிப்பு பணி மேற்கொள்ள தகுதியான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் புதிய பேருந்துகள் படிப்படி யாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி அம்பத்தூர், பிப். 27- ஆவடி அருகே வெள்ளா னூர் ஏரியில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற வாலி பர் தண்ணீரில் மூழ்கி பலி யானார். ஆவடி அருகே வெள்ளா னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  வளர்த்தீஸ்வரன் (26). இவர்  திங்கட்கிழமை அதே பகுதி யைச் சேர்ந்த நண்பர் பழனி வேல் என்பவருடன் வீட்டி லிருந்து புறப்பட்டு சென்றுள் ளார். பின்னர் இருவரும் கோயில்பதாகையில் உள்ள மதுபான கடையில் மது குடித்துவிட்டு,  வெள்ளா னூர் ஏரியில் மீன் பிடித் துள்ளனர்.  அப்போது ஏரியில் ஆழ மான பகுதிக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த வளர்த்தீஸ்வரன் தண்ணீ ரில் மூழ்கியுள்ளார். இதைப்  பார்த்த பழனிவேல் சத்தம்  போட்டு அக்கம் பக்கத் தினரை அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் ஆவடி  தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்த னர். மீட்புபடை வீரர்கள் வந்து ரப்பர் படகு மூலம் ஏரியில் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய வளர்த்தீஸ்வரன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த ஆவடி  டேங்க் பேக்டரி காவல் துறை யினர் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய தொழில்நுட்பத்தில்  ஸ்மார்ட்போன் அறிமுகம் 

சென்னை,பிப்.27- கீறல் மற்றும் கறை படியாத பூச்சுகளைக் கொண்ட புதிய தொழில்நுட்பத்தில் விவோ, தனது  முன்னணி ஸ்மார்ட்போன் வரிசையில் ஒய்200இ 5ஜி என்னும் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. நீடித்து உழைக்கும் எக்கோ-பைபர் தோல் மற்றும் கறை, கீறல் விழாத எதிர்ப்பு பூச்சு ஆகியவற்றுடன் கூடிய  இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ள  முதல் போன் ஆகும். ஒரு அற்புதமான ஆடியோ-விஷுவல் அனுபவம் மற்றும்  துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் இமேஜிங் திறன்களை யும் கொண்டுள்ளது. 50 எம்பி பிரதான கேமரா, 2எம்பி  பொக்கே கேமரா மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி ஆகிய வற்றைக் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கல்வி ஆராய்ச்சி   மாணவர் பரிமாற்ற ஒப்பந்தம்

சென்னை, பிப். 27- சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ கேஸ்டல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றம் ஆகிய வற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. சவீதா பல்கலைகழகத்தின் வேந்தர் முனைவர் என்.எம்.வீரையன் முன்னிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், தலைவருமான பேராசிரியர் அலெக்ஸ் ஜெலின்ஸ்கி மற்றும் சிமாட்ஸ் கல்வி பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ்.சுரேஷ் குமார்  ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சிறந்த பணியிட சூழலுக்கான விருது 

சென்னை, பிப். 27- இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி பணியிடங்களில் தொழிலாளர்களுக்கான வசதிகள்  மற்றும் உள் கட்டமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்  சிறந்த 50 நிறுவனங்களை ‘கிரேட் பிளேஸ் டு வொர்க்’ என்னும் அமைப்பு தேர்வு செய்து  விருது வழங்கி வருகிறது.   இந்த ஆண்டு விருதுக்கான நிறுவனங்களில் சைக்கிள் ப்யூர் அகர்பத்தி தயாரிப்பு நிறுவனமான என் ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.  நிறுவனத்தில் பணியிட சூழலை மேலும் வளர்ப்பதற்கு இந்த விருது ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேசன் அரிசி கடத்தியவர் கைது

அம்பத்தூர், பிப். 27- ஆவடி அருகே ரேசன் அரிசியை விலைக்கு வாங்கி  பதுக்கி விற்பனை செய்த  இளைஞரை காவல்துறையி னர் கைது செய்தனர்.  சென்னை புறநகரில் பொது விநியோகத் திட்டத் தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப் படும் அரிசி உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து கடத்தி விற்பனை  செய்வதாக அம்பத்தூரில் இயங்கி வரும் சென்னை வடக்கு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய் வுத் துறை, காவல் துறை யினருக்கு புகார்கள் வந்தன.  இதையடுத்து காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில்  காவல்துறை யினர்  ஆவடி அடுத்த பட்டா பிராம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை  மடக்கி விசாரணை நடத்தி னர்.  அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர் கொண்டு வந்த மூட்டையை சோதனை  செய்தபோது, அதில் ரேசன்  அரிசி இருந்தது பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி னர். அதில் அவர் திருநின்ற வூர், மின்சார வாரிய அலுவலகம் சாலையைச் சேர்ந்த விசுவநாதன் (21) என்பதும், திருநின்றவூர், பட்டாபிராம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசியை விலைக்கு  வாங்கி, அதை திருநின்ற வூரில் உள்ள ஒரு கிடங்கில்  பதுக்கி வைத்து பட்டாபிராம் மேம்பால பணியில் பணி யாற்றும் வடமாநில தொழி லாளர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.  அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் இருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை காவல்துறையினர் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

பெண் குழந்தைகளுடன் ரயில் முன்  பாய்ந்த  தாய்

பெண் குழந்தைகளுடன் ரயில் முன்  பாய்ந்த  தாய் ராணிப்பேட்டை,பிப். 27- வாலாஜா ரயில் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுடன் இளம்தாய் ஒருவர்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருக்கு வெண்ணிலா (28) என்ற மனைவியும் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4) ஆகிய  இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகறாறு காரணமாக வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார். இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்க ளுடன் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு செவ்வாயன்று காலை சென்று எர்ணாகுளம் -ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார். இதில் வெண்ணிலா மற்றும் அவ ரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.

செங்கம் அருகே கர்நாடக அரசு  பேருந்து மோதி 2 பேர் பலி

திருவண்ணாமலை,பிப்.27- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்து பக்கிரி பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரின் பஞ்சர் ஒட்டும் கடையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர். செவ்வாயன்று  அதிகாலை  அவர் பஞ்சர் ஒட்டும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த  கர்நாடகா அரசு பேருந்து, ஆம்னி பேருந்து மீது மோதியது.  இதில், பிரசாந்த் மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் அன்பரசு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   தகவல் அறிந்து சென்ற செங்கம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக இருவது உடலையும்  செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மின் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக 

விழுப்புரம், பிப்.27- விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த இளம் பெண் கலைவாணி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி கேட்டு அவரது தந்தை பொன்னுசாமி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாயன்று (பிப்.27) கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், விழுப்புரம் அருகே  மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் கலைவாணி (வயது 26) எருமனந்தாங்கல் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் தோட்டத்தில் பணிசெய்து கொண்டிருந்தபோது  உயர் மின் அழுத்த மின்கம்பி கவனக்குறைவாக தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு காரணமான மின் வாரியத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கலைவாணியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்  புதிய கிளைகள் உதயம்

கிருஷ்ணகிரி, பிப்.27- அஞ்செட்டி வட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் 3 புதிய கிளைகள் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சிவலிங்கபுரம் கிளை, அத்திமரத்தூர் கிளை, பக்திகானூர் கிளை என 3 கிளைகள் துவக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.ஜெயராமன்,  விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர். சிவலிங்கபுரம் கிளைத் தலை வராக பசம்மா,செயலாளராக ராமன், அத்திமரத்தூர் கிளைத் தலைவராக முனி சாமி, பக்திகானூர் கிளைச் செயலாளராக பசவராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.