சென்னை,மே 12-
சென்னையில் 5 புதிய விளையாட்டு திடல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளியன்று (மே12) திறந்து வைத்தார்.
ராயபுரம் காத்படா பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி நிலம், மாதவரம் ரிங்ரோடு மற்றும் எம்.ஜி.ஆர். 2-வது தெரு, ஆலந்தூர் சேது லட்சுமி அவென்யு, மதுர வாயல் கங்கா நகரில் உள்ள காந்தி தெரு ஆகிய இடங்க ளில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட் டுள்ள 5 புதிய விளையாட்டுத் திடல்களை அவர் திறந்து வைத்தார்.
சென்னை தண்டையார் பேட்டை-சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.2 கோடியே 40 லட்சம் செலவி லும், ராயபுரம்-கல்லறை சாலையில், மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.4 கோடியே 53 லட்சம் செலவிலும், அண்ணாநகர்-செனாய்நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.4 கோடி செலவிலும், அடை யாறு - காந்தி கிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியை ரூ.2 கோடியே 6 லட்சம் செலவிலும் புதுப் பிக்கப்பட்ட பள்ளிகளை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார்.
மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட திறந்தவெளி இடங்களில் 19 புதிய பூங்காக்களையும், சோழிங் கநல்லூர்-சக்தி நகரில் மறுசீர மைக்கப்பட்ட ஒரு பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.
நெசப்பாக்கத்தில் ரூ.74 கோடியே 12 லட்சம் செல வில், நாளொன்றுக்கு 50 மில் லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட ரூ.561 கோடியே 26 லட்சம் செல விலான சென்னைப் பெரு நகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 14 முடிவுற்ற திட்டப் பணிகளையும் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.