districts

img

தோழர் சி.சுரேஷின் 4ஆம் ஆண்டு நினைவுதினம்

தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியம் கல்கேரியில் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியதற்காக ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சி.சுரேஷின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், தளி ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ்,மாவட்டக் குழு உறுப்பினர் அனுமப்பா, முருகேஷ் உள்ளிட்ட சுரேஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.