districts

சென்னை முக்கிய செய்திகள்

தென்சென்னையில் 41, மத்திய  சென்னை 31, வடசென்னை 36 பேர் போட்டி

சென்னை, மார்ச் 30 - தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் 41 பேரும், மத்திய சென்னையில் 33 பேரும்  போட்டியிடுகின்றனர். 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்.19ந் தேதி தொடங்கி, ஜூன் 1ந் தேதி வரை 7 கட்ட மாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்.19ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, அதிமுக அணி, பாஜக அணிகள் மோதுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ந் தேதி தொடங்கி 27ந் தேதி வரை நடைபெற்றது. இதன்படி தென்சென்னை யில் 64 மனுக்களும், மத்திய சென்னையில் 58 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ந் தேதி நடைபெற்றது. தென்சென்னையில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 41 மனுக்களும், மத்திய சென்னையில் 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மார்ச் 30ந் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த இருத் தொகுதிகளிலும் எவரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெறவில்லை. தென்சென்னையில் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை (திமுக) எதிர்த்து மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தன் (அதிமுக), தெலங்கானா முன்னாள் ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக), எஸ்.தமிழ்செல்வி (நாதக) என 41 பேர் போட்டியிடுகின்றனர். மத்திய சென்னையில் தயாநிதி மாறனை (திமுக), எதிர்த்து பி.பார்த்தசாரதி (தேமுதிக), வினோஜ் (பாஜக), டாக்டர் கார்த்திகேயன் (நாதக) உள்ளிட்டு 31 பேர் போட்டியிடுகின்றனர். வடசென்னை வடசென்னை மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி உட்பட  36 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 31 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.  திருபெரும்புதூர் திருபெரும்புதூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 53 மனுக்களில் 21 மனுக்கள் நிரா கரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இங்கு டி.ஆர்.பாலுவை (திமுக) எதிர்த்து ஜி.பிரேம்குமார் (அதிமுக), வேணுகோபால் (தாமக-மூ), வி.ரவிச் சந்திரன் (நாதக) உள்ளிட்டோர் போட்டியிடு கின்றனர். 

திருவண்ணாமலை தொகுதியில் 31, ஆரணியில் 32 வேட்பாளர்கள் போட்டி

திருவண்ணாமலை,மார்ச் 30- திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு 42 நபர்களிடமிருந்து 49 வேட்பு மனுக்களும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு 40 நபர்களிடமிருந்து 48 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டு தொகுதிகளுக்குமான வேட்பு மனுக்கள் கடந்த வெள்ளி யன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திருவண்ணா மலை தொகுதியில் 49 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள் மற்றும் பிற காரணங்களால் 12 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டு 37 வேட்பு மனுக்கள் ஏற்கப் பட்டது. அதேபோல், ஆரணி மக்க ளவை தொகுதியில் வரப்பெற்ற 48 வேட்பு மனுக்களில் கூடு தல் மனுக்கள் மற்றும் பிற கார ணங்களால் 16 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் 6 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டு 31 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.  திரு வண்ணாமலை தொகுதியில்  திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், அதிமுக வேட்பா ளர் கலியபெருமாள் உள்ளிட்ட 20  வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர். ஆரணி மக்களவை தொகுதியில் 3 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டு 29 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.  அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், பாமக வேட்பாளர் கணேஷ்குமார், உள்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எரிவாயு சிலின்டர்களில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

கள்ளக்குறிச்சி,மார்ச் 30- கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலி யுறுத்தி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் விழிப்பு ணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. கள்ளக்குறிச்சி மாவட் டம், கல்வராயன்மலை மற்றும் கள்ளக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் மக்க ளவை  தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்களை கொண்டு, பேருந்துகள், வாகனங்கள், வீடுகளுக்கு செல்லும் எரிவாயு உரு ளைகள் ஆகியவற்றில்  விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்   ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பக்கெட்  தண்ணீரில்  விழுந்து  குழந்தை பலி

சென்னை, மார்ச் 30- சென்னை அருகே திரிசூலத்தில் பக்கெட் தண்ணீரில் விழுந்து ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திரிசூலம் லட்சுமண் நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் மனைவி காயத்ரி. இவர்களுக்கு பிரவீன்ராஜ் என்று ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. ராஜகுரு, சென்னை மாநகராட்சியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். . பிரவின்ராஜ் வீட்டின் வளாகத்தில் இருந்த ஒரு தண்ணீர் நிறைக்கப்பட்ட வாளி அருகில்  வெள்ளிக்கிழமை விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென அந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்தான். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் குழந்தையை தேடி அங்கு வந்த ராஜகுரு, வாளிக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், குழந்தையை  மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.

கடலூர் மக்களவைத் தொகுதியில்  19 வேட்பாளர்கள் போட்டி

கடலூர், மார்ச் 30- கடலூர் மக்களவைத் தொகுதியில் இறுதி  கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. 19 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 20 ம் தேதி முதல் வேட்பு மனு  தாக்கல் தொடங்கியது. 30 பேர் வேட்பமனு தாக்கல் செய்த நிலையில் வேட்பு மனு பரிசீலினையின் போது 11 மணிக்கு தள்ளுபடி செய்யப்பட்டனர்.  இதனை அடுத்து சனிக்கிழமை இறுதி  வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலர் அருண்தம்புராஜ் வெளியிட்டார். அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் கை சின்னத்திலும், தங்கர்பச்சான் மாம்பழம் சின்னத்திலும்,  தேமுதிக சார்பில்  ப.சிவக்கொழுந்து முரசு சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வே.தணிகைச் செல்வன் யானை சின்னத்திலும், போட்டி யிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை  சேர்ந்த வேட்பாளர்களான சு.அறிவுரைநம்பி பலாப்பழம் சின்னத்திலும், வே. மணிவாசகன் ஒலிவாங்கி சின்னத்திலும், கி.மாயகிருஷ்ணன் சிறு உரலும் உலக்கை யும் சின்னத்திலும், தங்க முருகன் வாளி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளராக இரா.ஆனந்தி, சு.ராசமோகன், இரா. ராஜசேகர், ச.சக்கர வர்த்தி, ரா.சீனிவாசன், சு.வ.தட்சிணா மூர்த்தி, வி. தட்சிணாமூர்த்தி, ஆ. பாலாஜி,  ஞா.பிச்சமுத்து, இரா.பிரகாஷ், சி. ராமலிங் கம் ஆகிய 19 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றிய   தேர்தல் பறக்கும் படை

கள்ளக்குறிச்சி, மார்ச் 30- கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மையனூர் சிங்காரத் தோப்பு மும்முனை சந்திப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்  கொளஞ்சிவேல்  தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமையன்று (மார்ச் 30)  வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது   இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த  இருவரை நிறுத்த முயன்ற போது தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள்  வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வேட்டையாடிய  பறவைகளை கீழே போட்டு விட்டு அதே வாகனத்தில் தப்பினர். மர்ம நபர்கள் விட்டு சென்ற துப்பாக்கி மற்றும்  பறவைகளை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைக் கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக  கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

விழுப்புரம் தொகுதியில்  17 வேட்பாளர்கள் போட்டி

விழுப்புரம், மார்ச் 30- விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்  என மாவட்ட தேர்தல் அலுவலர்   சி.பழனி தகவல் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட மார்ச் 20 முதல் 27 வரை  வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு தாக்கலின்போது மொத்தம் 31 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 18 நபர்களின்  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 13 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று  வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள கடைசிநாள் என்பதால்,  1 வேட்பாளர் வேட்பு மனுவிவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

அரக்கோணம் தொகுதியில்   26 மனுக்கள் ஏற்பு

ராணிப்பேட்டை, மார்ச் 30 –  அரக்கோணம் மக்கள வைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் உட்பட  26 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்ப ட்டுள்ளன. இந்த தொகுதியில்  3 வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப்பெற்றனர். இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர்  ச. வளர் மதி 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு அவர்கள் வேட்புமனுவில் அளித்த முன்னுரிமை வரி சைப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் பொது பார்வை யாளர் சுனில் குமார், மாவட்ட  வருவாய் அலுவலர் ந. சுரேஷ், தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.