சென்னை, டிச. 25- சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்க வும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிக ளின் தொடர்ச்சியான நடவடிக்கை களை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்ப வர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடு பவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர் கள், போதைப் பொருட்கள் கடத்து பவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்ப வர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவ ர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 1.1.2021 முதல் 24.12.2021 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 247 குற்ற வாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 96 குற்ற வாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்ற வாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தியும் மற்றும் விற்பனை செய்த 29 குற்றவாளி கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 403 குற்றவாளிகள் சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் உத்தர வின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு காவல்துறை தெரிவித்திருக்கிறது.