சிதம்பரம், ஜூன்.30-
சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் நகரத்தில் ஞானப்பிரகாசம் குளம், குமரன் குளம்,பெரியண்ணா குளம் உள்ளிட்டஆறு குளங்கள் ரூ. 6 கோடி யில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரு கிறது. இதில் பெரியண்ணா குளம் பணிகள் முடிவடைந்து பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிதம்பரம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கு 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 40 கோடியில் சாலை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, உழவர் சந்தை பகுதியில் ரூ.5 கோடியில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் காய்கறி சந்தை பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவருமான இளைய பெரு மாளுக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைப்பதற்காக சிதம்பரம் புற வழிச்சாலையில் இடம் தேர்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.