districts

img

சாலை விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலி

சிதம்பரம், மே 25- சேலம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (38). இவர் அந்த பகுதி யில் டைல்ஸ் மற்றும் கிரானைட் கடை வைத்துள்ளார். இவரது மாமனார் துரை சாமி மயிலாடுதுறை அருகே புதி தாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு தேவை யான டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு மினிலாரியில் செல்வக்குமார் வந்து கொண்டிருந்தார். வண்டியை சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் நகுலேந்திரன் (28) ஓட்டி வந்தார். இந்த லாரியில் செல்வக்குமாரின் மனைவியின் தங்கை கற்பக வள்ளி (27), செல்வக்குமாரின் மகன் மிதுன் (4) ஆகியோரும் வந்தனர். மினி லாரியின் பின்புறம் தொழிலாளர்கள் 4 பேர் அமர்ந்து இருந்தனர். இந்த மினி லாரி புதன்கிழமை(மே25) அதி காலை சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கூத்தங்கோவில் சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழிச் சாலையில் நின்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் மினி லாரியின் முன் பகுதியில் பயணம் செய்த மூன்று பேருடன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், மினிலாரியின் பின்னால் அமர்ந்திருந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.  இந்த விபத்தில் படுகாயமடைந்த வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலைநகர் காவல் துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.