districts

img

மின்சாரம் தாக்கி 4 மாடுகள் பலி

வேலூர், ஜூன் 10-

    வேலூரில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்த வசந்தகுமார், உத்தரமூர்த்தி, சரஸ்வதி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது மாடுகளை கணபதி நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் சனிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுககள் அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கும், மின் வாரியத்திற்கும் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து அங்கு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.