districts

img

3600 கிலோ கெட்டுப்போன மட்டன், சிக்கன் பறிமுதல்

சென்னை, மே 24 - சென்னையில் உள்ள  பிரபல தனியார் உணவ கத்தில் இருந்து 3.6 டன் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை கிண்டியில் உள்ள பிரபல பிரியாணி உணவகத்துக்கு 3 டன்னுக்கு மேல் கெட்டுப்போன இறைச்சி வந்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மண்டல உணவு  பாதுகாப்புத்துறை நிய மன தலைவர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில்  கெட்டுப்போன இறைச்சி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற இருந்த திரு மணம் ஒன்றிற்காக பிரபல பிரியாணி உணவகத்திடம் 3,600 கிலோ மட்டன் மற்றும்  சிக்கன் இறைச்சி ஆர்டர் செய்யப்பட்டதும். பிரியாணி  நிறுவனம் இந்த ஆர்டரை  ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவனத்தி டம் வழங்கியதும் தெரிய வந்தது. இதற்காக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 3.5 டன் ஆடு, 12 ஆயிரம் சிக்கன் லெக் பீஸ் எடுத்து வரப்பட்டுள்ளது. இறைச்சி கெட்டுப்போய் இருப்பதை கண்ட திருமண வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டு இறைச்சியை திருப்பி அனுப்பியுள்ளனர். அந்த இறைச்சி சென்னை கிண்டியில் உள்ள உணவ கத்துக்கு கொண்டுவரப் பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கெட்டுப் போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் ஒரு  பகுதியை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக் கும் அனுப்பி ஆய்வு செய்ய வுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் உணவு டெலி வரி செய்யும் நிறுவனத்திடம்  விளக்கமும் கேட்கப்பட் டுள்ளது.