அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கீழ்வெண்மணியில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்மணி நினைவு ஜோதிக்கு பெரம்பலூர் - கடலூர் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் ராமநத்தம் பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய இணை செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கே.பிரிஜா, மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டையொட்டி தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகி தொட்டி குமரப்பா நினைவு ஜோதிக்கு ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத்தலைவர் பி.டில்லிபாபு, துணைச் செயலாளர் பெருமாள், ஓசூர் வட்டச் செயலாளர் ஆனந்தகுமார், தலைவர் திம்மாரெட்டி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.