ரசாயன குடோனில் 2-வது நாளாக தீ
சென்னை,டிச.10- மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத் தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு வெள்ளியன்று நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தீயிலிருந்து வெளியேறிய புகை திரு வொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண் ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாடு பெற்றோர் – குழந்தைகளின் உறவை பாதிக்கும்
சென்னை, டிச. 8- இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. எங்கும் நிறைந்து காணப்படும் இந்த டிஜிட்டல் சாதனங்கள் நமது உறவுகள் இடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மக்களிடையே உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் விவோ நிறுவ னம் சைபர்மீடியா ஆராய்ச்சி நிறுவனத்து டன் இணைந்து ‘விவோ ஸ்விட்ச் ஆப் ஆய்வின்’ ஐந்தாவது பதிப்பை வெளியிட் டுள்ளது. ‘பெற்றோர் - குழந்தை உறவில் ஸ்மார்ட்போன்களின் தாக்கம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது ஸ்மார்ட்போன்களின் அதிகப் படியான பயன்பாடு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கியுள்ளது. இதில் அதிக அளவிலான ஸ்மார்ட் போன் பயன்பாடு தங்கள் உறவுகளை பாதிப்பதாக பெற்றோரும் குழந்தைகளும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் அடிப்படையில் டிசம்பர் 20-ந்தேதியை ‘சுவிட்ச் ஆப்’ தினமாகக் கொண்டாடுவதன் மூலம் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவது குறித்து விவோ வலியுறுத்துகிறது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் சேரவும், அன்றைய தினம் ஒரு மணி நேரம் அனைத்து டிஜிட்டல் சாதனங் களையும் சுவிட்ச் ஆப் செய்து தங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விவோ அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகம் - புதுச்சேரியைச் சேர்ந்த 25 மீனவர்களை கைதுசெய்த இலங்கை!
நாகப்பட்டினம், டிச.10- நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை விசாரணைக் காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களது இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளதாகவும், இலங்கைக் கடற்படையின் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. மேல் விசா ரணைக்காக அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த தாக கூறி இலங்கைக் கடற் படையினர் மொத்தம் 33 இழுவைப் படகு களையும் 220 தமிழக - புதுச்சேரி மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கைது குறித்து, மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் கூறுகையில், “மீனவர்களின் வாழ்வா தாரத்தைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 300 மருத்துவ குழுக்கள் நியமனம்
சென்னை, டிச. 10- மிக்ஜம் புயல் பாதித்த பகுதிகளில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை யால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால், வயிற்று போக்கு, காய்ச்சல், சேற்றுப் புண், உணவு ஒவ்வாமை, கிருமி தொற்று போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டங்களுக்கு 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறி வித்திருந்தது. அதன்படி, சென்னை – 159 மருத்துவ குழுக்கள், செங்கல்பட்டு – 60 மருத்துவ குழுக்கள், திருவள்ளூர் – 51 மருத்துவ குழுக்கள், காஞ்சிபுரம் – 30 மருத்துவ குழுக்கள் என இந்த மருத்துவ முகாம்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில், மேலும் 7 நாட்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேவைப்பட்டால், நிலைமைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும் என்றும் பொது சுகா தாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.