வலி மாத்திரைகளை போதைப்பொருளாக விற்பனை: 3 மாணவர்கள் கைது!
சென்னை,மே 29- சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனி குடியிருப்பு பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர்களிடம் 100 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர், 21 வயதுமிக்க பி.காம் மூன்றாம் ஆண்டு மாணவர் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரத்து 700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மாணவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை,மே 29- சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் செவ்வாயன்று இரவு மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 2 பிரிவுகளாக மாணவர்கள் மோதிக் கொண்டதில், பொருளியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு லேசான வெட்டு பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரூட்டு தல விவகாரத்தில் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கிடையே தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காயம் அடைந்த மாணவரை வெட்டிய மாணவர் தப்பி ஓடிய விட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து புதனன்று காலை தகவலறிந்த கீழ்பாக்கம் போலீசார், கல்லூரி வளாகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுமைப்பணி கிளை உதயம்
சென்னை, மே 29- சென்னை செங்கல்பட்டு லோடிங் அன்லோடிங் bஜனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் புதிய கிளை ஞாயிறன்று (மே 26) அம்பத்தூர் டாஸ்மாக் குடோனில் உதயமானது. சுபாஷ் சந்திரபோஸ் கிளை என பெயரிடப்பட்டுள்ள இந்த கிளையின் தொடக்க விழாவில் சங்கக் கொடியை சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ம.நீலமேகம் ஏற்றினார். பெயர் பலகையை சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கே.பி.ராமு, ஜி.சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோலார் கேமராவுடன் சாலை தடுப்பு
சென்னை, மே 29- சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிய சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்படும் சென்னையில் பேரிகார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேரிகார்டுகளை சாலையில் அதிவேக பயணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை கண்காணிப்பு கேமரா மூலம் ஸ்கேன் செய்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். அதன் மூலம் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தற்போது பரிசோதனை அடிப்படையில் சென்னை சில முக்கிய சாலைகளில் வைத்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணங்கள்!
சென்னை, மே 29- மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ‘பிரி பெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ்’ கட்டணங்களை உயர்த்த உள்ளது. நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடபோன் நிறு வனம் விரைவில், 5ஜி சேவை வழங்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 17 விழுக்காடு வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி உள்கட்டமைப்புக்கு, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளது. குறிப்பாக சிக்னல் டிராஃபிக்கை குறைப்பதற்காக அதிக அளவில் செல்போன் டவர்கள் மற்றும் கேபிள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே முதலீடுகளை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 4ஜி, 5ஜி சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10 முதல் 17 விழுக்காடு உயர்த்துவதை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 விழுக்காடு வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: சென்னையில் 23 சுற்றுகள் நடைபெறுகிறது!
சென்னை, மே 29- மக்களவைத் தேர்தலில் பதி வான வாக்குகள் அனைத்தும் வருகிற 4 ஆம் தேதி எண்ணப்படு கிறது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளை எண்ணுவதற்கு அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளுக்கு பல்வேறு கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு மின்னணு இயந்தி ரங்கள் சீல் அகற்றி திறப்பது, அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எவ்வாறு கணக்கிட்டு எண்ண வேண்டும் என்பது சம்பந்தமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் வட சென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியில், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் லயோலா கல்லூரியில், தென்சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்பட உள்ளன. இதற்காக வடசென்னைக்கு 357 ஊழியர்கள், தென் சென்னைக்கு 374 ஊழியர்கள், மத்திய சென்னைக்கு 380 ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், நிய மிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் புதனன்று (மே 29) நடைபெற்றது. மொத்தம் 1,433 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடக்கிறது. சட்ட மன்ற தொகுதி வாரியாக ஓட்டு கள் எண்ணப்படுகின்றன. வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதி களில் 14 மேஜைகள், மத்திய சென்னைக்கு உட்பட்ட 5 தொகுதி களில் 16 மேஜைகள், சோழிங்க நல்லூர் தொகுதியில் மட்டும் அதிக பட்சமாக 30 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஸ்ட்ராங் அறை ஸ்டோர் அறையில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பகுதி, வளாகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். ஓட்டு எண்ணும் பகுதியில் 22 சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படுகிறது. ஓட்டு எண்ணும் ஊழியர்கள் எந்த சட்டமன்ற தொகுதிக்கு போகி றார்கள் என்பது 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு முடிவு செய்யப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பொது பார்வையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி வருகிறார்கள். அவர்கள் முன்னி லையில் 2-வது கட்ட பயிற்சி 3 ஆம் தேதி நடத்தப்படும். எந்த மேஜையில் யார் பணியில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்கும் கடைசி கட்ட பணியாளர்கள் தேர்வு 4 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். 18 சட்ட மன்ற தொகுதிகளில் மொத்தம் 268 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மொத்த சுற்றுகள் 321 ஆகும். எழும்பூர், துறைமுகம், ராயபுரம் சட்டசபை தொகுதிகளில் குறைந்த பட்சமாக 13 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படும். அதிகபட்சமாக திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் தொகுதியில் 23 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்களின் இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதி காரிகள் அறிவிப்பார்கள். தபால் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு மேஜைக்கு 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டாலும் கடைசியில் தான் முடிவு அறிவிக்கப்படும். ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்க ளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வேட்பாளர்களின் அடிப்படையில் மொத்தம் 14,290 முகவர்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனு மதிக்கப்படுவர். வடசென்னை 5040 முகவர்கள், தென் சென்னை 4786, மத்திய சென்னைக்கு 4464 பேர் வரை அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வடசென்னை தொகுதி தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜா உடனிருந்தார்.
கடைகளை அகற்றி கொண்ட வியாபாரிகள்
கடலூர்,மே 29- கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பேருந்து நிலை யத்தில் சாலையோர பழக் கடைகள் வியாபாரிகளே முன்வந்து அகற்றி கொண்ட னர். கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த வியாபாரிகள் இந்த இடத்தில் கடை வைப்பதற்கு எங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆகையால் எங்கள் கடைகளை அகற்றக் கூடாது எனக் கூறி போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன் கிழமை கடலூர் மாநகராட்சி செயற் பொறியாளர் ராஜசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், திருப்பாதிரிப்புலியூர் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி ஊழி யர்கள் கடலூர் பேருந்து நிலையத்திற்கு நேரில் வந்தனர். அங்கிருந்து வியா பாரிகள் தங்கள் கடைகளை தாங்களாகவே முன்வந்து அகற்றுகிறோம் என தெரி வித்து அங்கிருந்த கடை களை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர்.
வீட்டுமனைகளை அங்கீகரிக்க லஞ்சம்: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
வீட்டுமனைகளை அங்கீகரிக்க லஞ்சம்: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு கள்ளக்குறிச்சி, மே 29- வீட்டு மனை பிரிவுகள் அங்கீகரிக்கப்படுவதற்கான கையூட்டு பெற்ற உதவி இயக்குநர் உள்ளிட்ட இடைத்தரகர் கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு மனை பிரிவுகள் அங்கீகரிக் கப்படுவதற்கான உதவி இயக்குநர் ராகுல் ராஜிடம் ரூ.9 லட்சத்திற்கு காசோலை மற்றும் ரூ.62 ஆயிரம் ரொக்கத்தை இடைத்தரகர் மூலம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீ சார் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட இடைத்தரகர் இடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நகர ஊரமைப்பு அலுவல கத்தில் நடைபெற்ற சோதனையில் திடீர் பரபரப்பு நிலவியது.
ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சி,மே 29 - உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழாவில் சங்கத்தின் ஆளுநர் ராகவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி கள் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆளுநரின் அதிகாரப்பூர்வ வரவேற்பு கூட்டம் ஞானாம் பிகை தனியார் பள்ளியில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் அன்பழகன், சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாபு, பொருளாளர் வெங்க டேஷ்,மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அன்பழகன், தெய்வீகன், சுரேஷ்குமார், ரமேஷ்பாபு, மாவட்ட தலைவர் வின் சென்ட் மற்றும் வெங்கடா ஜலபதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.