வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
சென்னை, ஏப். 30- புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த வர் முரளி (22). இவ ருடைய நண்பர் தண்டையார் பேட்டை சுனாமி குடி யிருப்பை சேர்ந்த விக்கி (22). விக்கியின் பிறந்த நாளை முன்னிட்டு திங்கட்கிழமை மாலை புது வண்ணாரப்பேட்டை துறை முகம் குடியிருப்பு விளை யாட்டு திடல் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது முரளிக்கும் புது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மனோஜ் என்ப வருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனோஜ் கட்டை யால் முரளியை அடித்துள் ளார். உடனே முரளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனோ ஜின் தலை, தொடை ஆகிய பகுதிகளில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிறந்த நாள் பார்ட்டியில் சண்டை ஏற்பட்டு அதன் காரணமாக அரிவாள் வெட்டு சம்ப வம் நடைபெற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் முரளி, விக்கி, புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சஞ்சய் (19), எண்ணூர் சுனாமி குடி யிருப்பை சேர்ந்த முகேஷ் (23) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகமைப்பள்ளிகளாக அறிவித்திடுக!
பொதுபள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
கோவை, ஏப்.30- அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அருகமைப் பள்ளி களாக அறிவித்து அனைத்துக் குழந்தை களுக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில மேடையின் தலைவர் இரத்தின சபாபதி,பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கோவை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பைப் பெறுவதற்கு வழி வகுப்பதே கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம். கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 மிகத் தெளிவாக அரசு தன் பள்ளி கள் மூலம் கல்வி தர வேண்டும், யாராவது, அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் அத்தகைய பெற்றோர் அரசிடம் கல்விக் கட்டணம் கோர முடியாது என்று தெளிவுபட கூறியுள்ளது. எந்தப் பகுதிகளில் நேரடியாக அரசே கல்வி தரும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் தனி யார் பள்ளியில் சேர்த்து குழந்தையின் கல்வி உரிமையை அரசு பாதுகாக்கும். அரசால் இயலவில்லை என்றால்தான் தனி யார் மூலம் கல்வி உரிமையை உறுதி செய்யும் சூழல் உருவாகும் என்பதை யாரும் உணர முடியும்.தமிழ்நாடு அரசு தன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் 2024 - 2025 கல்வி ஆண்டு முதல் அரு கமைப்பள்ளிகளாக அறிவித்து அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பு களைப் பெரும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடைமுறையினை கர்நாடக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு உருவாக்கி யுள்ள விதிகள் செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துள்ளது அரசே தனது பொறுப்பில் கல்வி உரிமையை வழங்க முன்வரும்போது அதற்கு நீதிமன்றம் என்றுமே துணை நிற்கும். கல்வி உரிமைச் சட்டத்தின் படி முழத்தொகையையும் அரசுப் பள்ளிகளில் செலவிடும் போது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வலுவடைவதுடன் மாண வர்கள் தங்களின் குழந்தைப் பருவ உரிமையை முழுமையாக அனுபவிக்க இயலும். எனவே 2024 - 2025 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்கி உள்ள சூழலில் விரைந்து உரிய அறிவிப்பினைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நீச்சல் பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை, ஏப்.30- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் வரை நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலரை அலுவலக வேலை நாட்களில் 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மது கடத்தல்: இருவர் கைது
விழுப்புரம்,ஏப்.30- விழுப்புரம் அருகே காரில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய இருவரை போலீசார் செவ்வா யன்று கைது செய்தனர். விழுப்புரம் அருகே எல்.ஆர்.பாளையம் ரயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில மது பானங்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரேம்குமார் (28), மற்றொருவர் கோயம்புத்தூர் சரவனாதி பகுதியை சேர்ந்த பூபதி (24) என்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக அவரிடம் இருந்து சுமார் 234 லிட்டர் புதுச்சேரி மாநில மதுபானங்கள், 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.