districts

img

செங்கல்பட்டு அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

சென்னை, டிச.26- சென்னை நெற்குன்றம், அழகம்மாள் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது35). இவர் தனது மனைவி சரண்யா, மகள் ரியா மற்றும் உறவினர்கள் ஜெயா அவரது மகள் ஹேமா (13) மகன் பாலா(10), ஆகியோருடன் திண்டுக்கல் நோக்கி புதனன்று இரவு காரில் புறப்பட்டனர். கணபதி ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னை நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கணபதி, சிறுவன் பாலா, சிறுமி ஹேமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெயா, சரண்யா, ஒன்னறை வயது குழந்தை ரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து பற்றி அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து  3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஜெயா உள்பட 3 பேருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.