இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்லாவரம் பகுதி, சஞ்ஜெய் காந்தி நகரில் 28வது ஆண்டாக விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.கருணாநிதி எம்எல்ஏ, வார்டு கவுன்சிலர் மங்கையர் திலகம், வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஜானகிதேவி, பகுதிச் செயலாளர் சிந்தன், கிளை நிர்வாகிகள் கமலேஷ், பிரவீன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.