districts

img

தரங்கம்பாடி ரயிலை மீண்டும் இயக்கக் கோரி 250 கி.மீ சைக்கிள் பேரணி

மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேஓடிய ரயிலை மீண்டும் இயக்கி காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாபெரும் சைக்கிள் பிரச்சார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச்செயலாளரும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர்களில் ஒருவருமான பி.சீனிவாசன், குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்றினர்.