districts

img

சென்னை மாநகராட்சி மீட்பு பணியில் 23 ஆயிரம் பேர்: மேயர் தகவல்

சென்னை,நவ.14-  மழை பாதிப்பு பணி களுக்காக மொத்தம் 23 ஆயி ரம் பணியாளர்கள் களத் தில் உள்ளதாக சென்னை  மேயர் பிரியா தெரிவித் துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் வடகிழக்குப்  பருவமழை தொடர்பாக  களத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னெச் சரிக்கை மற்றும் கண் காணிப்பு நடவடிக்கை களை, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா, மாநக ராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் செவ்வாயன்று (நவ.14)ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையை எதிர்கொள்ள 23 ஆயிரம் பேர் தயார் நிலை யில் உள்ளனர்” என்றார். காவல்துறை, தீயணைப் புத்துறை என அனைத்து துறை ஒருங்கிணைந்த மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற 100 குதிரைத்திறன்  கொண்ட மோட்டார்கள் தயாராக உள்ளன. தேங்கும் மழை நீரை வெளியேற்ற  845 மோட்டார் பம்புகள். 446 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.  சென்னை மாநகராட்சி யின் திரு.வி.க. நகர் மண்ட லத்திற்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் பணி களையும், அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழை நீர் வடி காலில் மழைநீர் சீராக வெளியேறுவதையும், ஸ்டீபன்பசன் சாலை செங்கம் சிவம் மேம் பாலத்தின் அருகில் நீர் வெளியேற்றும் நிலை யத்தில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேறுவதையும் ஆய்வு மேற்கொண்டனர். ராயபுரம் மண்டலம் வார்டு 63 உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.