districts

img

மழையை எதிர்கொள்ள 23,000 பேர் தயார்

சென்னை, நவ.3- சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று சென்னை மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தொடர் பாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மழை நீர் தேங்கும் பகுதி களில் இந்த ஆண்டு மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப் பட்டு 92 விழுக்காடு முடிந்து ள்ளன. மீதமுள்ள பணிகள் 10 நாட்களில் முடிக்கப்படும். மாநக ராட்சி சார்பில் 33 கால்வாய்களில் 53.42 கிமீ நீளத்துக்கு, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள 15 கால்வாய்களில் 107.06 கிமீ நீளத்துக்கு தூர்வாரும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப் பட்டுள்ளன. தேங்கும் மழை நீரை வெளியேற்ற 845 மோட்டார் பம்புகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், திரு மண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் 169 நிவாரண மையங்களில், ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு சமைக்கும் வகையில் சிந்தா திரிப் பேட்டையில் பொது சமை யல் கூடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகராட்சியில் மழைக்கால பணிகளை மேற்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் தொடர்பான புகார்களை பொது மக்கள் 1913, 044-2561 9204, 044-2561 9206 மற்றும் 044-2561 9207 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.