2003ம் ஆண்டு ஜூலை 2ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 1.76 லட்சம் பேரை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தார். உச்ச நீதிமன்ற வழக்கை தொடர்ந்து அனைவரும் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர். இந்த போராட்டத்தின் 20ம் ஆண்டு எழுச்சி நாள் கருத்தரங்கம் எழும்பூரில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளர்கள் நா.வினோத்குமார் (தென்சென்னை), ம.அந்தோணிசாமி (வடசென்னை), சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வம் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பேசினர்.