districts

img

ஓசூரில் மாநில சதுரங்க போட்டி: 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி,ஜன.29-  ஓசூர் குணம் மருத்துவ மனை,சிப்காட் லயன்ஸ் கிளப் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. 2 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் 250 அரசு, தனியார் பள்ளி மாண வர்கள், இளைஞர்கள் பொது பிரிவினர் என 9,11,15,17 மற்றும் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்றனர்.  இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 5 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு மொத்தம் ரூ. 1 லட்சம் வழங்கினர். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயம், கோப்பை, பதக்கம், சான்று வழங்கி னர். ஓசூர் குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை இயக்குநர்கள் மரு. பிரதீப் குமார், செந்தில், அரிமா சங்க நிர்வாகி கள் ரவிவர்மா, நம்பி, ரமேஷ் பாபு, சீதா ஜெய ராமன்,சதுரங்க மூத்த பயிற்சியாளர் ஜெய பால்சந்தாடி, பயிற்சியாளர் லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.