districts

img

புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

திருவள்ளூர், நவ.30- தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000  கன அடி தண்ணீர் வெளியேற்றத்தால் ,  தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக  விளங்கும் புழல் ஏரியின் மொத்த கொள்ள ளவு 3300 மில்லியன் கன அடி ஆகும், 21. 20 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 20 .31 அடியாகவும், தற்போதைய தண்ணீர் இருப்பு 3074 மில்லியன் கன அடியாக உள்ளது, நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியாக உள்ளது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200, 1000 கன அடி தண்ணீர் புதனன்று வெளி யேற்றப்பட்டது. மழைநீர் வரவு அதிகரிக்கவே வியாழனன்று (நவ.30), 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.  இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிகுறித்து உள்ளது மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இதே போன்று சோழவரம், பூண்டி, கண்ணன் கோட்டை -தேர்வாய் கண்டிகை, செம்பரம் பாக்கம் ஆகிய ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.