districts

விவசாயிகளுக்கு 2.5 லட்சம் மரக்கன்றுகள் விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி அறிவிப்பு

விழுப்புரம்,டிச.3- நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) பெரியசாமி தெரிவித்துள்ளார்.  விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமான மும், வேலைவாய்ப்பும் கிடைக்கச்  செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழ கத்தின் சுற்றுப்புற சூழலை பாது காக்கும் வகையில் தமிழ்நாடு விவ சாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது.  இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும். நிலத்தின் வரப்புகளிலும், குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்து மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஈட்டி, ரோஸ்வுட், மகோகனி, மருது, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, கடம்பு உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகளும், தனியார் நாற்றங்கால் பண்ணை மூலம் 1,65,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மானியத்தில்..
வரப்பு முறையில் நடவு செய்ய பயனாளி ஒருவருக்கு ஒரு எக்ட ருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக 320 மரக்கன்றுகளும், விவ சாய நிலங்களில் நடவு செய்ய எக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்று கள் வீதம் அதிகபட்சம் 1,000 மரக்கன்று களும் வழங்கப்படும். மொத்தத்தில் 2,65,000 மரக்கன்றுகள் முழு மானி யத்தில் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை பராமரிக்க விவ சாயிகளுக்கு ஊக்கத் தொகையாக உயி ருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு, குறு விவசாயி கள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவ சாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகள், மரக்  கன்றுகளை பெறுவதற்கு உழவன் செயலியில் பதிவுசெய்ய வேண்டும்.  செயலியில் உள்ள இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்து இல வச மரக்கன்று முன்பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதனுள் மரக்கன்று பெறுவதற்கான விண்ணப்பம் இருக்கும். விண்ணப் பத்தில் கோரப்பட்டுள்ள விவ ரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆர்வமுள்ள அனைத்து விவ சாயிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்  கிறார்.