சென்னை, மார்ச் 17- சென்னையில் சுற்றுலா மற்றும் பயணம் குறித்த கண்காட்சி நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடை பெற்றது. நேபாளம், தாய்லாந்து உள்பட 3 நாடுகள் மற்றும் 16 மாநில அரசுகளின் சுற்றுலாத்துறைகள் சார்பில் தங்களது மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த அரங்குகள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. 2023 இந்திய சுற்றுலா புள்ளிவிவர அறிக்கையில், 2 கோடியே 18 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சென்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தேசிய அளவில் அதிக மான உள்நாட்டுப் பார்வை யாளர்களை ஈர்க்கும் 2 வது இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இந்திய சுற்றுலாத் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிலை யில் சுற்றுலா மற்றும் பய ணம் குறித்த கண்காட்சி தமிழகத்திற்கு மேலும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை அழைத்து வரபயன்படும் என்று சுற்ற லாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை, தென்னிந்தி யாவில் உள்நாட்டு மற்றும் வெளியூர் பயணங்களுக் கான குறிப்பிடத்தக்க மையமாக விளங்குகிறது என்று கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த பேர்பீஸ்ட் மீடியா நிறுவன தலைவர் சஞ்சீவ் அகர்வால் கூறி னார்.