விழுப்புரம், மே 4-
விழுப்புரம் மாவட்டத் தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர உண வகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இளங்கோவன், ஸ்டாலின், ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வியாழனன்று (மே 4) ஆய்வு மேற்கொண்டனர்.
அதேபோல் விழுப்புரம் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்த பயணியர் உணவகங்களிலும் ஆய்வு செய்தனர்.
அப்போது இரண்டு உணவகங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற் றாததால் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் உணவகங்க ளில் இருந்த காலாவதியான 25 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்த னர். மேலும் 6 உணவகங்க ளுக்கு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர்.