சென்னை,ஜன.19- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி கள் தொடங்கி நடந்து வருகிறது. மாதவரம்-சோழிங்க நல்லூர், மாதவரம்-சிறுசேரி, சிப்காட், பூந்த மல்லி-கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னை வடபழனி 100 அடி சாலையில் மேம்பாலத்துக்கு மேலே உயர்மட்ட ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மேல்தளத்தில் மெட்ரோ ரயிலும், கீழ் தளத்தில் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்கிறது. தரையில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்கின்றன. தற்போது நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முக்கிய மான சந்திப்புகளில் போக்கு வரத்து நெரிசலை குறைக் கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதையும் அமைக்கப் படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பயணத்தை எளிதாக்கும். மாநில நெடுஞ் சாலைத் துறைக்கான இந்த பாலங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே கட்டிக் கொடுக்க உள்ளது. இதில் மியாட் மருத்துவமனை அருகே அமையும் மேம்பாலம் 3.14 கி.மீ. நீளம் கொண்டது. இது சென்னை நகரத்தின் மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இருக்கும். 2026-ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிவடை யும் போது இந்த பாலப் பணி களும் முடிந்து போக்குவரத் துக்கு தயாராகிவிடும். என எதிர்பார்க்கப்படுகிறது.