districts

img

ஆட்டிஸம் சிகிச்சை முறை 2 நாள் உலக மாநாடு

எஸ்ஆர்எம்  ஆக்குபேஷனல் தெரபி  கல்லூரி சார்பில் ஆட்டிஸம் சிகிச்சை முறையில் உலகளாவிய முன்னேற்றம் பற்றிய 2 நாள் உலக மாநாடு எஸ்ஆர்எம் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எஸ்.பொன்னுசாமி, துணைவேந்தர் முனைவர் சி. செந்தமிழ்செல்வன், வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், இணை வேந்தர், முனைவர் பி. சத்தியநாராயணன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.