புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தில் காலியாக இருந்த 17 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார். இதை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.