districts

img

தேர்தல் நிதி வழங்கல்...

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 165வது பிறந்த நாள் கருத்தரங்கம் ஞாயிறன்று (பிப்.18) மயிலாப்பூரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ், எஸ்.விஜயா, கே.பாலகிருஷ்ணன், ஜெ.அன்புரோஸ், மகேஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.