எஸ்ஆர்எம் பல்கலையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் 15 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். ரோபோ பாட்டு பாடி நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விழாவில் நடைபெற்ற கலை மற்றும் வீர விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர் எம்.பி, இணைவேந்தர் முனைவர் ரவி பச்ச முத்து, துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, மணிமங்கை சத்தியநாராயணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சென்னை பாரிமுனையில் உள்ள ஆயூள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்தில் தேசிய இளைஞர் தினத்தையொட்டி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. முதுநிலை கிளை மேலாளர் ஆர்.தினேஷ் இனிப்பு பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடி மகிழ்ந்தனர். கிளை உதவி மேலாளர் எஸ்.நடராஜன், ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஆர்.முரளி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.