குடியாத்தம், மே 16-
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் திங்களன்று கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரேவதி, ஜெயந்தி, சீதா ஆகிய 3 பெண்களிடம் 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.