districts

சென்னை முக்கிய செய்திகள்

போலி ஆவணம் மூலம்   ரூ.12 கோடி நிலம் விற்பனை  2 பேருக்கு 15 மாதம் சிறை

  அம்பத்தூர், பிப். 22- சென்னை, அண்ணாநகர் கிழக்கு, 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜெகநாதன்(81). இவரது குடும்பத்தின ருக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலம் அம்பத்தூர் பகுதியில் உள்ளது.  இந்த நிலத்தை திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலூகா, தனக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (65), இவரது தம்பி சாமி (57) ஆகிய இருவரும் சேர்ந்து, போலி  ஆவணம் தயாரித்து கடந்த 2010ஆம் ஆண்டு விற்று விட்டனர்.  புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு  காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து ரவி,சாமி ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 1இல்  நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து புதனன்று நீதிபதி ஸ்டாலின் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட தால் ரவி, சாமி ஆகிய சகோதரர்களுக்கு தலா 15 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி

சென்னை, பிப். 22- சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் கடப்பா கல் விழுந்து 5 வயது சிறுவன் இறந்தான்.  பள்ளிக்கரணை அருகே உள்ள கோவிலம்பாக்கம், சத்தியா நகர், 1ஆவது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் கவின் (5). புதன்கிழமை மாலை சிறுவன் கவின் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடபாக்கல் திடீரென சரிந்து கவின் மீது விழுந்தது.  இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்த வர்கள் மீட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கவின் உயிரிழந்தான். இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் வாலிபர் பலி

சென்னை, பிப். 22- சென்னை கோயம்பேட்டில் ஷேர் ஆட்டோ மீது மோட்டார்  சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன். இவரது மகன் அஜித் (22). இவர் அந்தப் பகுதியில்  உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வந்தார். அஜித்,  வியாழக்கிழமை அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில்  கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இந்த  விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவரை கைது செய்தனர்.

மாணவர்கள்  காப்பி அடிப்பதை தடுக்க 3200 பறக்கும் படை

சென்னை, பிப்.22- பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக் கப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்விற்கு தலா 3200 பறக்கும் படை வீரர்களும், பத்தாம் வகுப்பு தேர்விற்கு 3350 வீரர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் தலா 3302 மையங்களில் நடக்கிறது. 10ஆம் வகுப்பு தேர்வு 4107 மையங்களில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.10.4 கோடியில் மூன்று பள்ளிகளுக்கு புதிய கட்டிடம்:  மாநகராட்சி அனுமதி

சென்னை, பிப். 21 - பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வியாழனன்று (பிப்.22) நடைபெற்றது. இதனை தொடர்ந்து 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, 69வது வட்டம்  சோமையா தெரு உயர் நிலைப் பள்ளிக்கு ரூ.2.75 கோடி,  ரங்கசாயி தெரு நடு நிலை பள்ளிக்கு  ரூ.3 கோடி,  70வது வட்டம், கபிலன் தெரு  நடுநிலை பள்ளிக்கு ரூ.4.63 கோடி புதிய கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்டது. விருகம்பாக்கம் கால் வாய் குறுக்கே, சூளை மேடு ரயில்வே காலனி 3வது  தெரு - மாதா கோவில் தெருவை இணைக்கும் நடைப் பாலத்திற்கு பதிலாக 1.60 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 97வது வட்டம், வீராசாமி தெரு, சோலை 3வது தெரு வில் உள்ள தனியார் பள்ளி வளாகங்களை இணைத்து மேம்பாலம் அமைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. 110வது வட்டம் புஷ்பா நகர் பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.3.82 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள தேவா லய உறுப்பினர்களை அடக்கம் செய்ய, கல்லூரி வளாகத்தில் கூடுதலாக 2760 சதுர அடி நிலத்தை மயான பூமியாக பயன் படுத்தி கொள்ள அனு மதி உள்ளிட்ட தீர்மானங் கள் மாநகராட்சி கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.

எம்சாண்ட் ஆலையை  24 மணி நேரம் இயக்க கோரிக்கை

எம்சாண்ட் ஆலையை  24 மணி நேரம் இயக்க கோரிக்கை விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் டிப்பர் லாரி அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வியாழ னன்று கோரிக்கை மனு அளித்தனர். சங்கத்தின் நிர்வாகி காளிஸ்வரன் தலைமையில் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.  அந்த மனு வில் கிரஷர் மற்றும் எம் சாண்ட் பிளாண்ட்  24மணி நேரமும் இயங்க அர சாங்கம் ஆவண செய்ய வேண்டும், ஒருவருட காலத்திற்கு முன்பு இருந்த பழைய விலையை நிர்ணயம் செய்து தொடர்ந்து எங்களுக்கு புளூ மெட்டல்ஸ் சார்ந்த பொருள்கள் மற்றும் எம் சாண்ட் தங்கு தடையின்றி உரிய பில் மூலம் வழங்க வேண்டும். கிரஷரில் கொடுக்கும் பில்லில் பொருளின் சரி யான அளவு மற்றும் பொரு ளின் விலை, சரியாக குறிப்பிட்டு வழங்குவதன் மூலம் ஜிஎஸ்டி செலுத்த ஏதுவாக இருக்கும். மேலும் சரியான பில் வழங்காத நிறுவனம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அந்த குவாரியை மூடும் விதமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப் பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் சங்கரய்யா மறைவுக்கு  இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் சங்கரய்யா மறைவுக்கு  இரங்கல் புதுச்சேரி,பிப்.22- புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வியாழக்கிழமை துவங்கியது. கூட்டம் துவங்கியவுடன் பேரவைத்தலைவர் ஆர்.செல்வம் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். அதன்படி மறைந்த முன்னாள் புதுச்சேரி அமைச்சர் ப.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்  தோழர் என்.சங்கரய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், தேமுதிக தலைவர் விஐயகாந்த் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி,பிப்.22- காவேரிப்பட்டணம் ஒன்றியம், மலையாண்ட ஹள்ளியில் கோவில் நிலங்களில் குடியிருப்போர் சாகுபடி செய்து வரும்  விவ சாயிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் அனுமப்பா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தார்.  அறநிலையத்துறை கோவில் நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வெளி யேற்ற அரசு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும், விவசாயிகளிடம் ரசீது இல்லாமல் வரி என பல மடங்கு லஞ்சம் வசூ லிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் நிலங்களில் பல ஆண்டு களாக வீடு கட்டி குடி யிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   புதிய நிர்வாகிகள் வட்டக்கிளை தலை வராக  டிகான்சர்க்கரை, செயலாளராக  உத்தரமணி, பொருளாளராக கே.வி.எஸ்.சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

விபத்து வழக்கு ரூ.1 கோடி நட்ட ஈடு 

விபத்து வழக்கு ரூ.1 கோடி நட்ட ஈடு  கடலூர், பிப்.22- கடலூர் மாவட்டம், விருப்பாட்சி அஞ்சல், ரங்கநாதபுரம், தொப்பையாங்குப்பத்தை சேர்ந்த  வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (வயது 39)என்பவர் சிங்கபூரில் எம்எல்டி கம்பெனியில் சூப்பர்வைசராக ஆக பணி செய்து வந்தவர். அவர் கடந்த 28.07.2020  அன்று கடலூர் பிரதான சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளங்கோவன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் நட்டஈடு கோரி  வழக்கு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த கடலூர் மாவட்ட நீதிபதி ஆனந்தன் இறந்த இளங்கோவின்  குடும்பத் திற்கு நட்ட ஈடாக ரூ.88 லட்சமும் வட்டியுடன் சேர்த்து ரூ.1.20 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த  தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.