திருத்தணியை அடுத்த செருக்கனூர் ஊராட்சி பங்களா மேடு இருளர் காலனியில் கனமழை காரணமாக 15 குடிசைகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. சம்பவம் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் வி.அந்தோணி, மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, ஒன்றிய செயலாளர் ஜி.மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பாரதி, ஊராட்சி மன்ற தலைவர் சின்னதம்பி, செருக்கனூர் வருவாய் அலுவலர் ஸ்டீபன், துணை வட்டாட்சியர், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.