districts

சாராயம் விற்ற 13 பேர் கைது

ஆரணி, மே 16-

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா சந்தவாசல் கண்ணமங்கலம் களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது ஆரணி தாலுகாவில் மீனா, வேண்டா, கிருஷ்ண மூர்த்தி, ராமதாஸ், பாக்கியராஜ், பாபு, சந்தவாசல் பகுதியில் சாந்தி, வனிதா கண்ணமங்கலம் பகுதியில் விஜயகாந்த், ரேவதி உள்ளிட்ட 13 பேர் சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது.இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 1000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.