113வது சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (மார்ச் 25) கிண்டியில் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.விஜயா, டி.ஜெயந்தி, நிர்மலா, வீட்டு வேலை, முறைசாரா சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா மற்றும் சித்திரைசெல்வி, வசந்தா உள்ளிட்டோர் பேசினர்.