districts

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வேலூர் முன்னேற்றம், விழுப்புரம் குறைந்தது, கடலூர் பின் தங்கியது

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளியன்று (மே 19) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 18,287 மாண வர்கள் எழுதினார். இதில் 8,163 மாண வர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்ற னர். தேர்ச்சி 91.34 விழுக்காடாகும். 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்டு 59 பள்ளி கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 விழுக்காடு தேர்ச்சி பெற்று 38 ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91.34 விழுக்காடு தேர்ச்சி பெற்று 21ஆவது இடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 208 பள்ளிகளில்  மொத்தமாக 14,301 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,486 (87.31 விழுக்காடு) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

   திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த 10,382 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,870 (95.07 விழுக்காடு) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 361 பள்ளிகளில் 24,683 பேர் தேர்வு எழுதினர். இவற்றில் 22,356 மாணவர்கள் (90.57 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

   கடந்த ஆண்டு 91.99 விழுக்காடு மாண வர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த முறை  90.57 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி யடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 1.42 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த நிலையிலும் 66 அரசுப் பள்ளி கள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 57 தனியார் பள்ளிகள் என மொத்தம் 129 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்றுள்ளது. தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கடலூர்

    மாவட்டத்திலுள்ள 246 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16,296 பேர் எழுதினர். இவர்களில் 13,819 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 84.80 விழுக்காடாகும். மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி கள் 34, அரசு நிதியுதவி பெறும் பள்ளி கள் 3, தனியார் பள்ளிகள் 55 என மொத்தம் 92 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழில் குறைந்தது

    மொழிப் பாடமான தமிழில் தேர்வு எழுதிய 34,184 மாணவர்களில் 31,826 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி விகிதம் 93.10 விழுக்காடாகும். மற்ற பாடங்களில் அதிகமாக இருந்தாலும் தமிழ் மொழி பாடத்தில் மட்டும் 5.06 விழுக்காடு குறைந்துள்ளது. தமிழ்நாடு அளவில் கடலூர் 88.49 விழுக்காடு தேர்ச்சியுடன் 33ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில்  89.60 விழுக்காடு தேர்ச்சி யுடன் 18ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.