அம்பத்தூர், ஜூன் 22- அம்பத்தூர் புதூர் பகு தியில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 99.9 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேதுபாஸ்கரா பள்ளியில் இருந்து பங்கேற்ற 504 மாணவர்களில் 503 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். ஆர்.ஜெனிஷா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை யும், கே.ஜெப்ரின், கே.வி.மேகா ஆகியோர் 492 மதிப் பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், ஆர்.ருக்ஷனா 491 மதிப் பெண்கள் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ள னர். 8 மாணவர்கள் 500க்கு 490க்கு மேல் மதிப்பெண்க ளும், 30 மாணவர்கள் 480க்கு மேல் மதிப்பெண்களும், 57 பேர் 470க்கு மேல் மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். 178 மாணவர்கள் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளனர். 152 மாண வர்கள் முதல் தர வரிசையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 78 மாணவர்கள் இரண்டாம் தர வரிசையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடப் பிரிவில் 9 மாணவர்களும், அறிவியல் பாடப் பிரிவில் 20 மாணவர்களும், சமூக அறிவியல் பாடப் பிரிவில் 6 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் பெற்றோர்க ளுக்கும் வாழ்த்துக்களை யும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.