districts

img

காஞ்சிபுரத்தில் 1000 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம்!

காஞ்சிபுரம், டிச. 1 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையாலும், பெங்கல் புயலாலும் சுமார் 1,000 ஏக்கரில் சேதமடைந்த நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறுகையில், ஃ பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளது. இதைப்போல பல்வேறு இடங்க ளில் நூற்றுக்கணக்கான  ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, வேர்க் கடலை உள்ளிட்ட பயிர்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. லட்சக் கணக்கில் செலவு செய்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதங்களை கணக்கீடு செய்க பயிர் சேதங்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் வருவாய்த் துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை  கணக்கெடுப்பு நடத்தி நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், வேர்க்கடலை போன்ற பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.