districts

img

100 நாட்கள் வேலையும் முழு கூலியும் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி, செப். 13- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலையும் முழு கூலியும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் ஒன்றியத்திற்குட்பட்ட நமச்சி வாயபுரம், எலியத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். நமச்சிவாயபுரம் ஊராட்சியில் விருதாம்பிகை நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை பணிகளையும், ரூ.10.லட்சத்தில் மரக்கன்றுகள் இடையே அகழி வெட்டும் பணிகளை பார்வையிட்டார். அப்போது 100 நாட்கள் பணி முழுமையாக வழங்கப்படுகிறதா? பணிக்கான முழு ஊதியம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படு கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். பிறகு, ஊரக வளர்ச்சி துறை அலு வலர்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 100 நாட்கள் வேலையும் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் அறி வுறுத்தினார். நமச்சிவாயபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.38. லட்சத்தில் நடை பெற்று வரும் சிமெண்ட் சாலையின் கூடிய வடிகால்  வாய்க்கால் பணி களையும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2.75 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்தும், தெற்கு தெருவில் 15 வது நிதி குழு மானியத்தின் ரூ.2 லட்சத்தில்  வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து எலியத்தூர் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 3.90 லட்சத்தில் கட்டி முடிக்கப் பட்டுள்ள தடுப்பணை பணிகளையும். எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.80 ஆயிரத்தில் சமையற்கூடம்  சீரமைப்பு பணி நடைபெற்று உள்ளதையும். குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25.50 லட்சத்தில்  புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டி டத்தின் கட்டுமான பணிகளும், எலியத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த ஆய்வு பணியின்போது சின்ன சேலம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரவிசங்கர். ஜெகநாதன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறி யாளர்கள் ராஜசேகர், அசோக் காந்த், நமச்சிவாயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி கோவிந்தன், எலியத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.