districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக மத்திய சென்னையில் 10 ஆயிரம் மனுக்கள்

சென்னை, டிச. 29 - ஸ்டார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் சுமார் 10 ஆயிரம் மனுக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்தது. மின்சார வாரியங்களை தனியார்மய மாக்கவும், கட்டணங்களை கடுமையாக உயர்த்தவும் ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை ஏற்று தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதேசமயம் கேரள இடதுமுன்னணி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த மறுத்துவிட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கட்சி கிளர்ச்சி இயக்கம் நடத்தி வருகிறது. இதனையொட்டி தமிழ்நா ட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தி,  மின்வாரிய அலுவலகங்களில் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று (டிச.29) மத்திய சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 மையங்களில் மனு கொடுக்கும்  இயக்கம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதிக்குழு சார்பில்  வள்ளுவர் கோட்டம் மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அண்ணாநகர் பகுதி எம்எம்டிஏ காலனி, ஆர்.வி.நகர், பெரிபெரி சாலை மின்வாரிய அலுவலகங்கள், துறைமுகம் பகுதி, பிராட்வே மின்வாரிய அலுவலகம், வில்லி வாக்கம் சிட்கோ நகர் மின்வாரிய அலுவல கம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி நடுக்குப்பம், லபான் தெரு மின்வாரிய அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. மேலும், எழும்பூர் பகுதி, ஈ.வி.கே. சம்பத்  சாலை, கூக்ஸ் சாலை, மில்லர்ஸ் சாலை, சாஸ்திரி நகர், சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே. முருகன், வே.ஆறுமுகம், இ.சர்வேசன், வெ.தனலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோன்மணி, எஸ். மிரு துளா, எம்.தயாளன், பகுதிச் செயலாளர்கள் வே. இரவீந்திர பாரதி (ஆயிரம் விளக்கு), மகேந்திரவர்மன் (அண்ணாநகர்), ஜலாலுதீன் (துறைமுகம்), அன்பழகன் (வில்லிவாக்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.