கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 202 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 70 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ,அனைவருக்கும் கல்வி இயக்கக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், உதவித்திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, மறுவாழ்வு அலுவலர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.