கடலூர், செப்.6- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கு என்றும் இது பாஜகவின் தோல்வி பயத்தை காட்டு கிறது என்றும் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி கடலூரில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களை அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திரித்து கூறு கிறார்கள்”என்றார். கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடக அரசு காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கருப்பை யன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.